அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அங்கு அமைந்துள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து […]
