கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நேரத்தில் 7000க்கும் மேலான மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பல்வேறு மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சென்ற மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் […]
