மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர் இருக்கிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதால் அப்பா அலிக்கு எம்.பி நவாஸ்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த […]
