அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனங்கள் அதில் சிக்கிக் கொண்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் இருக்கின்றது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான சாலையில் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் […]
