திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இரண்டு மீனவர்களை விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், பிரசாந்த், பால்ராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட நான்கு பேரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது திடீரென கடலில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை படகு தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் 4 […]
