அதிவேகமாக சென்ற வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்தாய்(55) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சீவிகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி விஜயசாந்தி(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு பவுன்தாயும், விஜயசாந்தியுன் இரவு 7 மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளனர். […]
