சிவகங்கை மாவட்டத்தில் மருமகள், மாமியார் இருவரையும் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை 8 மாதத்திற்கு பிறகு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடுக்கூரணி கிராமத்தில் சந்தியாகு என்னும் 65 வயது முதியவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜகுமாரி (60) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினேகா […]
