புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொருட்களின் விற்பனை கண்காட்சி சென்னையில் மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெருமைப்பட வேண்டும். நாம் தயாரிக்கும் பொருள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் விதமாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் […]
