நாய் கடித்ததில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் காட்டில் அதிகமான அளவு மான்கள் வசித்து வருகின்றன. இதனை அடுத்து தெரு நாய் ஒன்று மானைக் கடித்துக் குதறி விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்த விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். […]
