மானிய விலையில் பெட்ரோல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே வைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]
