சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அழைப்பை எடுத்து பதில் அளித்து பேசி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் பகுதியில் மழைநீர் சற்று […]
