ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் இன்று ஆலோசனை நடந்து முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
