தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறு தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்குபதிவியல் நடைபெறும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்த்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் நலன் கருதி மறு தேர்வு நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. […]
