பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீஸ் கமிஷனர் நடந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகர காவல்துறை சார்பாக பிரபாத்- தாதகாப்பட்டி சிக்னலிருந்து தாதகாப்பட்டி கேட்முடிய நேற்று நடைபயண ரோந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கமிஷனர் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ரோந்து நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் அசோகன், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு சரவணன், […]
