மாதசீட்டு என்று கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வரும் காஜா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மாதசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டுத்தொகையில் பணம் செலுத்தினால் சீட்டு காலம் முடிந்ததும் சமந்தபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த […]
