மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை […]
