காஞ்சிபுரம் மாவட்டம், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபட்டுவருகின்றன. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து , தனது வாக்கினையும் பதிவு செய்தார் […]
