கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் மகளான நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்பகுதி மக்கள் […]
