அரசு கல்லூரி மாணவிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் சென்ற 2019-20-ம் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது பிகாம், பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாட வகுப்புகளில் 750 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்நிலையில் போதிய இட வசதி இல்லை என கூறி அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை நெல்லை காந்தி நகரில் இருக்கும் ராணி […]
