மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெட்டப்புதூரில் அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் உணவு உண்டுவிட்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து வகுப்பறையில் இருந்த 10 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர […]
