சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தாரமங்கலம் என்ற பகுதியில் செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அருகே உள்ள நால் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜயக்குமார் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]
