தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது, ” மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ. டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபின குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, […]
