பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]
