மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடாமல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது மிக ஆபத்தானது என்று டெல்லி துணை முதலமைச்சர் திரு.மணிஷ் சிசோடியா எச்சரித்துள்ளார். கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்த நிலையில் சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்னும் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் குழப்பம் நீடிப்பதால் மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்க்கு […]
