திருவேற்காடு பகுதியில் மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த எழிலரசி என்ற ஆசிரியர், திருவேற்காடு அடுத்த புலியம்பேடு பகுதியில் இருக்கின்ற அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் ஊரடங்கு அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருதியும், வேலை பார்க்காமல் வீட்டிலிருந்தே […]
