மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் கேக் வெட்டிய மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்பகையாக […]
