சென்னை அரசு பள்ளியில் ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]
