சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் […]
