லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன்பு தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டவர் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். இதையடுத்து லண்டன் காவல்துறையினருக்கு அந்த நதியில் விழுந்தது யார் ? […]
