ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று முன்தினம் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இத்தாலி வீரரான பெரேட்டினியுடன் மோதினார். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியதால் போட்டியில் அனல் பறந்தது. இதில் முதல் செட்டில் 5-0 என்ற […]
