மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலத்துப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு அலத்துப்பட்டி- குன்றக்குடி சாலையில் 58-வது ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட 10 வண்டிகளில் நெல்லை […]
