அறந்தாங்கியில் கோவில் கொடை விழாவில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. அறந்தாங்கி அருகே உள்ள கடையாதுப்பட்டியில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அங்கு 33வது ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினர். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. இப்பந்தயத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. மேலும் பந்தயம் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. […]
