மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை […]
