வாணியம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றி மாடு விற்பனை செய்திருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62 நபர்கள் தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பெங்களூர் நெடுஞ்சாலையில் […]
