மாடு மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அகரகட்டு கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் லதாவை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அப்போது பாளை மண்டல அலுவலகம் அருகில் ஆம்புலன்ஸ் […]
