மாடு பிடிக்க முயன்ற போது தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொகலார் கிராமத்தில் விவசாயியான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டிதாங்கல் கிராமத்தில் நடைபெற்ற சந்தையில் மாடு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சந்தை அருகில் சென்று கொண்டிருந்தபோது மாடு திடீரென துள்ளிக்கொண்டு ஓடியது. இதனால் வீரப்பன் அதை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]
