பிரபல இயக்குனர் தங்கர்பச்சன் காளையை அடக்கும் வீரர்களுக்கு வாகனத்திற்கு பதிலாக விவசாய கருவிகளை கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் பாரம்பரியமான விளையாட்டுக்களில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகைக்காக பல மாவட்டங்களில் நடத்தப்படும். இதில், அதிகமான காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வாகனம் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதற்கு பிரபல இயக்குனர் தங்கர்பச்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற, மாடுபிடி வீரருக்கு வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அப்போதும் […]
