கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முனிசாலை 1-வது மெயின் தெருவில் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முனியாண்டிபுரத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் முதல் மாடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குமரன் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் உடனிருந்தவர்கள் குமரனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் […]
