உயிரிழந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 35 வயது உடைய அந்த பெண் யானை இரவு […]
