சிவகங்கை அருகே மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு கோவில்களில் மாசி-பங்குனி மாதத்தை முன்னிட்டு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சிறப்பு வாய்ந்த மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் […]
