இலங்கையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நிதியமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்த இரண்டு விதமான திட்டங்கள் கூறப்படுவதால், கடந்த 4 வருடங்களாக இத்தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இந்திய வெளியுறவு செயலரான சிரிங்லா, இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சிறுபான்மை தமிழ் கட்சிகளோடு, சந்திப்பு நடத்தியுள்ளார். அதன்பின்பு, விரைவாக மாகாணசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். எனினும், இலங்கை அரசாங்கம் முன்பாகவே தேர்தலை நடத்த முடியாது என்று கூறியிருக்கிறது. மேலும், தேர்தல் குழுவினரிடம், […]
