சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பேசிய அவர், எதிர்பாராத […]
