சீனாவிலுள்ள தனியார் மழலையர்பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம் அன்ஃபு கவுண்டியிலுள்ள தனியார் மழலையர் பள்ளியில் இத்தாக்குதல் அரேங்கேறியுள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்நபர் லியு (48) எனவும் தலைமறைவாக […]
