பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வியும் கற்றுக்கொடுக்கும் பழங்குடி இளைஞரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி கற்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்ற நான்கு மாதங்களாக பள்ளிகள் […]
