உலக அளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக, நேபாள அரசு உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற பயணம் செய்வதற்கான அனுமதியை சென்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரம் மலையேற்றப் பயணம் தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி நேபாள சுற்றுலாத் […]
