சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலையரசி அம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த நெடுமரம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை ஊர்க்குளத்தான்பட்டி, சில்லாம்பட்டி, நெடுமரம், உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த வருடம் தேர்தலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அந்த கோவிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
