சட்ட விரோதமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைகேட், கோனேரிகுப்பம், வெளியூர் சுடுகாடு, ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக காஞ்சிபுர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து அதனை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. […]
