குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த அரசு பள்ளியின் ஆசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கலைமகள் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மறிங்கிப்பட்டியில் டாக்டர் அவார்டு தாய் பெண் எனும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்ப்பதற்காக காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]
