கோவையை தொடர்ந்து சென்னையிலும் ஒரு மர்ம வாகனம் லயோலா கல்லூரி வளாகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏன் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து பொது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இதே வாகனம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து இன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் இந்த லாரி கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இது கழிவறை வசதிகள் கொண்டிருக்கும் கண்டெய்னர் லாரி போல் உள்ளது. கல்லூரி […]
