கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகடரபள்ளி கிராமத்தில் விவசாயியான முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை கொட்டகையில் இருந்த 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து முனியம்மா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். மேலும் வனத்துறையினர் மர்ம […]
